Categories: latest newstamilnadu

ஐந்து நாட்களுக்கு கன மழை?…அலெர்ட் சொன்ன ஆய்வு மையம்…

தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்த நிலையில், இந்த மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இரு தினங்களாக தமிழகத்தின் சில இடங்தகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.  வட கிழக்கு பருவ மழை இன்னும் துவங்காத நிலையில் இந்த திடீர் மழை மாநிலத்தின் சில இடங்களை குளிரடையச் செய்துள்ளது. அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதி முதல் வட-கிழக்கு பருவ மழை துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மழை குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

Rain

குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது என்றும், இந்த மழை அடுத்த ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ள நிலையில் கோவை,திருப்பூர், நீலகிரி,கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி ஆகிய  மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என எச்சரித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

sankar sundar

Recent Posts

வாஷ்-அவுட் தானா ப்ளான்?…அட்டாக் மூடில் இந்திய அணி…

இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. மழை குறுக்கீடு,…

3 hours ago

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி…அக்டோபர் நான்காம் தேதி ஆஜராக உத்தரவு…

தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் முன்பு பதவி ஏற்பு விழாவும் நடந்து முடிந்தது. முன்னாள் அமைச்சர்…

4 hours ago

பெரியாரின் தொண்டனாக பெருமை…உதயநிதியை வாழ்த்திய நடிகர் சத்யராஜ்…

தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி…

8 hours ago

துவங்கியது நான்காம் நாள் ஆட்டம்…வங்கதேசம் தடுமாற்றம்…

இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர்…

9 hours ago

பிஎம் ஜெய் திட்டம்.. மோடிக்கு பறந்த கடிதம்.. முக்கிய ஹைலைட்ஸ்

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் கீழ்,…

9 hours ago

குறைந்தது விலை!…தாக்கம் கொடுத்த தங்கம்…இந்த நிலை நீடிக்குமா?…நகைப்பிரியர்கள் ஏக்கம்…

சர்வதேச பொருளாதார நிலை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பினைக் கொண்டே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. இதனால் தான்…

9 hours ago