Connect with us

latest news

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

Published

on

Rain

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும், வெயிலின தாக்கமும் இருந்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களைச் சேர்ந்த பொது மக்களும் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகி வந்திருந்தனர். மழை பெய்யுமா?, வெப்பம் குறையுமா? குளிர்ச்சி பிறக்குமா? என்பது கூட பிரார்த்தனைகளாக இருக்கும் அளவிற்கு வெயில் விஷ்வரூபம் எடுத்து ஆடி வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் தட்ப, வெப்ப நிலை குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் பல மாவட்டங்களுகளில் இன்று லேசானது முதல் வரையிலும் மிதமானது வரையிலான மற்றும் கனமழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த தனது கணிப்பை சொல்லியிருக்கிறது.

Rainfall

Rainfall

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்.அதே நேரத்தில் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமைலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சொல்லியிருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்ப நிலை 35 டிகிரி முதல் 36 டிகிரியை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்ப நிலை 26 டிகிரி முதல் 27 டிகிரி வரை இருக்கும் எனவும் தனது ஆய்வு அறிக்கை மூலமாக சொல்லியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

Published

on

Anbarasan udhayanidhi

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது. அன்மையில் அமெரிக்க சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டிருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவர் வெளிநாடு செல்லும் முன்னரே மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என தமிழக நாளிதழ் செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களானது நாளை நடைபெறும் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி முக்கிய அமைச்சர்கள் சிலரின் இலாகா மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

Stalin

Stalin

சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு பற்றியும்  சொல்லப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என உறுதி பட சொல்லியிருந்தார்.

பத்து நாட்களுக்குள் இது நடந்தே தீரும் என அமைச்சர் அன்பரசன் சொல்லியிருந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு குறித்த செய்தியை அந்நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதனால் திராவிட முன்னேற்றக கழகத்தினரிடையே உதய நிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவாரா? என்ற ஆவல் மேலோங்கியுள்ளதாக தெரிகிறது.அதே போல முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மறுபடியும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

Cricket

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

Published

on

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. சிவப்பு பந்துடன் ஹர்திக் பயிற்சியில் ஈடுபட்டதை பார்த்து பலரும், அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று கூறினர். பலரும் இவரது டெஸ்ட் கம்பேக் விரைவில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

முன்னதாக ஐபிஎல் 2022 ஆண்டு காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். முழு கவனத்தையும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா செலுத்தி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படவில்லை. இதற்கும் கூட அவர் உள்ளூர் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடினால், தேசிய அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டது ஏன் என்ற கேள்விக்கு விக்கெட் கீப்பர், பேட்டர் பார்த்திவ் பட்டேல் பதில் அளித்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமான போது ஜியோசினிமாவில் பேசிய பார்த்திவ் பட்டேல், ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக சிவப்பு பந்து கொண்டு பயிற்சி செய்ய சொன்னார்கள் என்று கூறியுள்ளார்.

“ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. வெள்ளை பந்து கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் தான் அவர் சிவப்பு பந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். என்னை பொருத்தவரை அவரது உடல், நான்கு அல்லது ஐந்து நாள் போட்டிகளுக்கு ஒத்துழைக்கும் என்று நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட அவர் ஒற்றை முதல்-தர போட்டியிலாவது விளையாட வேண்டும், இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்,” என்றார்.

google news
Continue Reading

latest news

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

Published

on

Anbumani

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும் நோக்குடன் கிள்ளியீர் பகுதியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. கிள்ளியூரை சுற்றியுள்ள கிராமங்களில் 1144 ஏக்கர் பரப்பளவில் இந்த சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த சுரங்கம் அமைக்கப்பட்டால் புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார. கிள்ளியூர் மற்றும் அதினை சுற்றியுள்ள பகுதிகள் அதிக அளவில் அணுக்கதிர்வீச்சு நிலவும் பகுதிகள் ஆகும்.

Tunnel

Tunnel

மணவாளக்குறிச்சி பகுதியில் இயங்கும் இந்திய அருமணல் ஆலையால் ஏறபடும் கதிர்வீச்சு காரணமாக அங்குள்ள் மக்கள் புற்று நோய், சிறு நீரகப் பாதிப்பு, தோல் நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அன்மைக் காலங்களில் இந்த வகை பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துள்ளதாக தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார் அன்புமணி

இந்த பகுதிகளில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் பாதிப்பு அதிகரிக்கும். அணுக்கதிர் வீச்சு தொடர்பான தீய விளைவுகளும் ஏற்படும். தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

google news
Continue Reading

Cricket

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

Published

on

Rain-Play

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி தொடர்களில் விளையாட வந்துள்ள வங்கதேச அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமாக தோற்றது. முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்தது.

துவக்கத்தில் இந்திய வீரர்களை அசைத்துப் பார்த்த பங்களாதேஷ் அணியை ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை தங்களது அபாரமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சினால் திணறடித்தனர். போட்டி நடக்க வேண்டிய ஐந்து நாட்களுக்குள்ளாகவே இரண்டு இன்னிங்ஸ்களும் முடிவடைந்து பங்களாதேஷ் பரிதாபமாக தனது வெற்றியை இந்திய அணியிடம் பறிகொடுத்தது.

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று துவங்கியது.

Kanpur

Kanpur

டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேசத்தை பேட்டிங் செய்ய அழைத்தது. முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றைய ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மூன்று விக்கெட்டுகளை இழந்து நூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்தது வங்கதேச அணி முப்பத்தி ஐந்து ஓவர்கள் நிறைவடைந்திருந்த நிலையில்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தங்கு தடை ஏதுமின்றி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. பலத்த மழையின் காரணமாக இன்றைய ஆட்டம் நடைபெறாமல் போனாலும் நாளை முழுமையாக போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர் இரு நாட்டு அணி ரசிகர்களும்.

google news
Continue Reading

Cricket

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

Published

on

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி கடந்த வாரம் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததோடு, இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இரு அணிகள் இடையிலான முதலாவது போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கான்பூரில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்திய வீர்ர்களான விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை அழைத்து நிற்க வைத்து, அவர் முன் அவரது பந்துவீச்சை செய்து காட்டிய சம்பவம் அரங்கேறியது.

கான்பூரில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆட்டம் துவங்கும் முன்பே, இந்த சேட்டை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அப்போது விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா பும்ராவின் முன் அவரது பந்துவீச்சு ஆக்ஷன் எப்படி இருக்கும் என்பதை செய்து காட்டினர். இதனை துவக்கத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்த இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் வாய்விட்டு சிரித்தார்.

களத்தில் போட்டி துவங்கும் முன் இரு வீரர்கள் பும்ராவை கலாய்க்கும் சம்பவத்தை பார்த்து சிரித்த ரியான், ஒருக்கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் தான் அணிந்திருந்த குளோவ் மூலம் முகத்தை மறைத்துக் கொண்டார்.

google news
Continue Reading

Trending