Categories: latest newstamilnadu

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்துள்ளது. வட-கிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த திடீர் மழை தமிழக மக்களை ஆனந்தப்படுத்தியிருந்தது.

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு  ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாளை வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை புதிதாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லியிருக்கிறது ஆராய்ச்சி மையம்.

Rain

வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.

மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில் அது குறைந்த காற்றழுத்தமாக உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதனால்  ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். 6-ந் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு தென்-மேற்கு பருவமழையின் பொழிவு அதிகமாக இருந்த நிலையில், வட-கிழக்கு பருவ மழையை அதிகமாக எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர் விவசாயிகள்.

 

sankar sundar

Recent Posts

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

4 hours ago

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…

5 hours ago

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…

5 hours ago

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…

5 hours ago

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC

இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…

5 hours ago

ரஜினி ரசிகர்கள் கொண்டாட ரெடியா?…நல்ல செய்தி வந்திருச்சி…

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்தியத் திறை உலகிலும் அதிக ஆதீக்கம் செலுத்தி வருபவர். இவர் நடித்து இம்மாதம்…

6 hours ago