குடும்பத்தை எதிர்த்து அவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்த பெண்ணை பெற்றோர்கள் கொன்று எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
பொதுவாக பெற்றோர்கள் ஜாதி, மதம், படிப்பு, தகுதி, அந்தஸ்து ஆகியவற்றை பார்த்து தனது மகனுக்கோ மகனுக்கோ திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதெல்லாம் மீறி மகள்களோ அல்லது மகன்களோ காதலிக்கிறார்கள் என்று தெரிந்துவிட்டால் போதும் அவர்களை கொலை கூட செய்ய தயங்குவது கிடையாது. அப்படி ஒரு சம்பவம் தான் ராஜஸ்தானில் அரங்கேறி இருக்கின்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் என்ற பகுதியை சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவர் தனது பெற்றோரை எதிர்த்து ரவி பீல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் அந்த பெண்ணை வலை வீசி தேடி வந்திருக்கிறார்கள். இதை அறிந்த காதல் தம்பதி பல இடங்களில் ஓடி ஓடி பதுங்கி தங்களது உயிர்களை காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.
இறுதியாக இந்த தம்பதி ஒரு வங்கிக்கு வர உள்ளதாக தகவல் கிடைத்தது. இதை அறிந்த குடும்பத்தினர் எப்படியோ அங்கு வந்து அந்த பெண்ணை அவர் கணவரின் கண்முன்னே காரில் கடத்திச் சென்று இருக்கிறார்கள். இதையடுத்து கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றார்.
ஆனால் அதற்குள் அந்த இளம் பெண்ணை கடத்திச் சென்ற குடும்பத்தினர் அவரை கொலை செய்து உடலை எரித்து விட்டார்கள். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் 80 சதவீதம் அந்த பெண்ணின் உடல் எரிந்து விட்டது. பின்னர் அந்த குடும்பத்தினர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…
பணப்பரிவர்த்தனை செய்ய வங்கிகளுக்கு மட்டுமே தான் செல்ல வேண்டும் என்ற காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. ஏ.டி.எம்.கள் அறிமுகத்திற்கு பின்னர்…