ராம்லீலா நாடகத்தின் போது திடீரென்று சண்டை ஏற்பட்டு ராவணன் ராமனை சரமாரியாக தாக்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உத்திரபிரதேசம் மாநிலம், அம்ரோகா என்ற பகுதியில் நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. பொதுவாக நவராத்திரி தினத்தில் ராவணன் தலையை ராமன் அம்பை எழுதி கொள்வார். ஆனால் இங்கு ஒரு சம்பவம் உல்டாவாக நடந்திருக்கின்றது. அந்த நாடகத்தில் ராமன் மற்றும் ராவணனாக நடித்த இரண்டு நடிகர்கள் உண்மையிலேயே அடித்து தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
ராம்லீலா நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் போர் தொடங்கியது. அப்போது ராமனும் ராவணனும் அம்புகளை விட்டு சண்டையிட்டனர். அந்த சமயத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கம் எழுப்பப்பட்டது. அப்போது ராவணனாக நடித்த நபர் திடீரென்று ராமனை தள்ளி விடுகின்றார். அதனால் ராமன் ராவணனை அடிக்க முற்படுகின்றார்.
அப்போது ராமனை கீழே தள்ளி அவரை ராவணன் அடிக்க தொடங்குகின்றார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்கள் இருவரையும் பிரித்துவிட்டு சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார்கள். இருப்பினும் தொடர்ந்து இருவரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இது தொடர்பான வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் புராண கதையையே மாற்றி விட்டார்கள் என்று கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.
POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…
கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…
ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…
வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…
சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…
இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…