சட்னியில் எலி ஒன்று நீச்சல் அடித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
தெலுங்கானாவில் சுல்தான்பூர் என்ற பகுதியில் ஜேஎன்டியுஹெச் என்கின்ற பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரி மாணவர்களால் பதிவு செய்யப்பட்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. லட்சுமி காந்த் என்பவரின் எக்ஸ் தளத்தில் இந்த வீடியோ வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த வீடியோவில் விடுதியில் இருக்கும் கேண்டினில் பெரிய பாத்திரம் ஒன்றில் சட்னி அரைத்து வைக்கப்பட்டுள்ளது. அதில் எலி ஒன்று நீந்துவதை நம்மால் பார்க்க முடிகின்றது. ஜேஎன்டியுஹெச் சுல்தான்பூர் கல்லூரியில் சட்னியில் எலி என்கின்ற தலைப்பில் வெளியான இந்த வீடியோவானது சுமார் 75 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அதில் ஒருவர் இது புதிதல்ல 2016 முதல் 2020 வரையில் தரமான உணவை எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் மெஸ் நிர்வாகத்திடம் நாங்கள் வாதிட்டு இருக்கின்றோம். ஆனால் கடைசிவரை எங்களுக்கு அது நடக்கவில்லை. தற்போதும் இது தொடர்வதை பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கின்றது என்று கூறி பதிவிட்டு இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் தாமோதர் ராஜா நரசிம்ஹா முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றார். இந்த வீடியோவை பார்த்து மக்கள் பலரும் மாணவர்களுக்கு விடுதியில் இப்படிப்பட்ட உணவை வழங்கினால் அவர்களின் உடல்நலம் என்ன ஆவது என்று அதிர்ச்சியுடன் கேட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…