Categories: indialatest news

அவமானப்பட்ட இடத்தில்… சீரும் சிங்கமாய் சாதித்து காட்டிய ரத்தன் டாடா… அப்படி என்ன நடந்துச்சு..?

டாட்டா குழுமத்தை உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக மாற்றிய பெருமை எப்போதும் ரத்தன் டாடாவுக்கு சேரும். இவர் தனது 86 வயதில் நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார். இவரின் மறைவு நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நேற்று 21 குண்டுகள் முழங்க ரத்தன் டாடா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தனது விடாமுயற்சி காரணமாக ரத்தன் டாடா இந்தியாவில் வெற்றிகரமாக முதல் கார் நிறுவனத்தை உருவாக்கியது.

அது மட்டுமில்லாமல் புகழ்பெற்ற பிரிட்டிஷ்கர் பிராண்டையும் விலைக்கு வாங்கினார். டாடா மோட்டார்ஸ் பிரிவில் உள்ள ஜாகுவார் லேண்ட்ரோ வரை ரத்தன் டாடா வாங்கிய சம்பவத்திற்கு பின் நடந்த ஒரு சுவாரஸ்ய கதையை தான் இதில் நாம் பார்க்க போகிறோம். 1998 ஆம் ஆண்டு ரத்தன் டாட்டா தனது கனவு திட்டமான டாடா இண்டிகா கார் மாடல் அறிமுகம் செய்தது டீசல் இன்ஜினுடன் கூடிய நாட்டின் முதல் ஹாட்ச்பேக் மாடலாகும்.

இதன் விற்பனை குறைவாக இருந்ததால் டாடா மோட்டார்ஸை அமெரிக்கா ஆட்டோ நிறுவனமான ஃபோர்டுக்கு விற்பதற்கு முடிவு செய்தார்கள். 1999இல் அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரிகள் மும்பை வந்து டாடா குழுமத்துடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் டெட்ராயிடில் அந்த நிறுவனத்தின் தலைவர் பில் போர்டை ரத்தன் டாடா சந்தித்தார்.

3 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் பில் போர்ட் மிக தரக்குறைவாக பேசி ரத்தன் டாடாவை அவமானப்படுத்தினார். பயணிகள் வாகன பிரிவு பற்றி எதுவுமே தெரியாத ரத்தன் டாடாவிடம் ஏன் இந்த தொழிலை தொடங்கினார்கள் என்று கேட்டதாக செய்தி வெளியானது. உங்களுக்கு எதுவும் தெரியாது, நீங்கள் ஏன் பயணிகள் கார் பிரிவை தொடங்கியுள்ளீர்கள் என்று போர்ட் அதிகாரிகள் டாடாவிடம் கூறினார்கள்.

மேலும் பிந்தைய வணிகத்தை வாங்குவதன் மூலம் இந்திய நிறுவனத்திற்கு உதவி செய்வது பற்றி பேசி இருந்தார்கள். இதைத்தொடர்ந்து போர்ட் மற்றும் டாடாவுக்கு இடையிலான ஒப்பந்தம் நடைபெறவில்லை அதன் பிறகு இந்தியா திரும்பிய டாடா தனது கார் வியாபாரத்தை விற்பதில்லை என்று முடிவு செய்தார். அதிலிருந்து சரியாக 9 ஆண்டுகள் கழித்து 2008 ஆம் ஆண்டு போர்ட் நிறுவனம் திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டது.

அப்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக உருவெடுத்தது.  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் போர்ட் நிறுவனத்தின் ஜாகுவார் மற்றும் லேன்ரோவர் பிராண்டுகளை விலைக்கு வாங்க முன் வந்தது. இந்த ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் கையெழுத்திடப்பட்டது. 2 நிறுவனங்களுக்கு இடையே 2.3  பில்லியன் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த சமயத்தில் போர்ட் தலைவர் பில் போர்டு ரத்தன் டாடாவுக்கு நன்றி தெரிவித்தார். ‘ஜாகுவார் லேண்ட்ரோவர் வாங்கியதன் மூலம் நீங்கள் எங்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்துள்ளீர்கள்’ என்று அவர் தெரிவித்திருந்தார். தன்னை இழிவு படுத்தியவர்களை கூட கைவிடாமல் அவர்களுக்கு உதவிய பெருமை எப்போதும் ரத்தன் டாடாவையே சேரும்.

Ramya Sri

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

3 hours ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

4 hours ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

4 hours ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

4 hours ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

5 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

5 hours ago