இவரு மட்டும் என்ன சும்மாவா?…ரோஹித்துக்கு ரெக்கமன்ட் செய்த ரவி சாஸ்திரி…

இந்திய கிரிக்கெட் தான் விளையாடும் எல்லாப் போட்டிகளிலும் வென்றே தீர வேண்டும் என்பது தான் இங்குள்ள ஒவ்வொரு இந்திய ரசிகரின் மனநிலையாக இருந்து வருகிறது. வெற்றி பெறும் போது அந்த வெற்றியை வசப்படுத்திய வீரர்களை தலையில் தூக்கி வைத்து ஆடி கொண்டாடி தீர்த்து விடுவார்கள். ஆனால் வெற்றிக்கு மாறாக தோற்று விட்டால் அப்படியே அந்தர் பல்டி அடித்து வீரர்களை வசைபாடி விடுவார்கள்.

வீரர்களை கொண்டாடி மகிழும் அதே நேரத்தில், இந்திய அணியை வெற்றிப் பாதையில் பயணிக்க வைக்கும் கேப்டன் களை பெருமை படுத்துவதிலும் ரசிகர்கள் தயக்கம் காட்டியது கிடையாது, அதே நேரத்தில் தோற்று விட்டால் நிலைமை தலை கீழ் தான். ஒரு பக்கம் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைவராக இருப்பது மிகப்பெரிய பெருமையாகவே இருந்தாலும் மறு முனையில் சில நேரம் அது உறக்கத்தை கெடுக்கும் பணியாக மாறி விடும்.

MS Dhoni

சமீபத்தில் நடந்து முடிந்த ஐம்பது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெறத் தவறியதால் அதிக விமர்சனங்களுக்கு உள்ளானவர் ரோஹித் சர்மா. இவரின் தலைமையில் தான் இந்தியா தொடரில் களம் கண்டது. அதே நேரத்தில் இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று வந்த இந்திய அணியின் தலைவரும் இவரே. இந்த வெற்றிக்குப் பின் இவருக்கு இருந்து வரும் மரியாதையே தனி தான் இப்போது.

ரோஹித் சர்மாவின் தலைமையை பற்றிய தனது கருத்துக்களை சொல்லியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான ரவி சாஸ்திரி. எம்.எஸ். தோனிக்கு நிகராக இந்திய அணியின் தலை சிறந்த கேப்டன் என்ற நற்பெயருடன் வரலாற்றில் இடம் பெறுவார் ரோஹித் சர்மா என புகழாரம் சூட்டியுள்ளார் ரவி சாஸ்திரி.

தோனி, சர்மா இவர்கள் இருவரில் யார் சிறந்தவர்கள் என்று கேட்டால், இருவருமே சமமானவர்கள் என்று தான் கூறுவேன், இதை விட பெரிய பாராட்டு ரோஹித்துக்கு தன்னால் கொடுக்க முடியாது, ஏனென்றால் தோனி என்னவெல்லாம் சாதித்துள்ளார், எத்தனை கோப்பைகளை வென்றுள்ளார் என் நமக்கு தெரியும் என சொல்லியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ரவி சாஸ்திரி.

sankar sundar

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

16 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

20 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago