இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்க உள்ளது ஒலிம்பிக் போட்டிகள். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த போட்டிகள் நடத்தப்படும். உலகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்று வருகிறது.
நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வளர்த்துக் கொள்ள இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒரு காரணியாக இருக்கும் என்ற நோக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதும். பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்களும் இந்த சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்களது திறமையை காட்டி வருகின்றனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் பிரச்சனைகளில் உலக நாடுகளும், ஐ.நாவும் தலையிட்டு வருகிறது. நீண்ட ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருந்து வருவது உலகறிந்ததே. இப்படிப்பட்ட நேரத்தில் தான் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவருக்கு இஸ்ரேலை ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்க பாலஸ்தீன் கோரிக்கை வைத்துள்ள்து.
இந்நிலையில் பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு நாடு அல்ல என்றும் பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி என்பது அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒலிம்பிக் கமிட்டி, மற்ற ஒலிம்பிக் கமிட்டிகளைப் போலவே சம உரிமைகளையும், வாய்ப்புகளையும் அனுபவித்து வருகிறது என சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தாம்ஸ் பாக் சொல்லி பாலஸ்தீனின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இதனால் இஸ்ரேல் வீரர்கள் நாளை மறு நாள் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க எந்த தடையும் இருக்காது.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…