Categories: Cricketlatest news

டைகர் கா ஹூக்கும்.. வெறியுடன் ரெடியாகும் ரிஷப் பந்த்..வெளியான புதிய வீடியோ..!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகவும் கோரமான கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த், அதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மெல்ல மீண்டு வருகிறார். டெல்லியில் இருந்து ரூர்க்கி சென்று கொண்டிருந்த போது, ரிஷப் பந்த் விபத்தில் சிக்கினார். கடந்த டிசம்பர் 2022 முதல் ரிஷப் பந்த் தீவிர சிகிச்சை பெற்றும், விபத்துக்கு பிறகு உடலை தயார்படுத்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Rishabh-Pant-1

தனது செயல்பாடுகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை ரிஷப் பந்த் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் ரிஷப் பந்த் சமீபத்தில் பகிர்ந்து கொண்ட வீடியோவில், அவர் எளிதில் பளு தூக்குதலில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்த வீடியோவுடன், “நீங்கள் நினைப்பதை விட, நீங்கள் வேலை செய்வதற்கான பலன்களை உங்களுக்கு கிடைக்கும்,” (You get what you work for, not what you wish for) என்று தலைப்பிட்டிருந்தார்.

Rishabh-Pant

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பை நிர்வகித்து வரும் ஷியாம் ஷர்மா மற்றும் ஹரிஷ் சிங்லா ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த்-ஐ நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ரிஷப் பந்த் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மெல்ல பயிற்சியை துவங்க ஆயத்தமாகி வருகிறார்.

விபத்துக்கு பின் மீண்டும் தன்னை தயார்படுத்திக் கொள்வதில் ரிஷப் பந்த் அதிவேகமாகவும், உறுதியுடனும் செயல்பட்டு வருகிறார். இவரது ரசிகர்கள் ரிஷப் பந்த் விரைந்து அணிக்கு திரும்ப வேண்டும் என்றும், மீண்டும் பழைய படி கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

Rishabh-Pant-2

ரிஷப் பந்த் விரைந்து மீண்டு வருகிறார், விரைவில் அவர் களத்திற்கு திரும்புவார் என்று ஷியாம் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். “மீண்டு வரும் முயற்சிகளில் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் எப்போது கம்பேக் கொடுப்பார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து இருக்கிறது, ஆனால் இதற்கு அதிக நேரம் தேவைப்படும். அவர் விரைவில் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறேன்,” என ஷியாம் ஷர்மா தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

33 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

4 hours ago