Categories: Cricketlatest news

ஆர்சிபி-யில் கோலியின் அரசியல்.. காட்டுத்தீயாக பரவிய தகவல்.. நெட்டிசன்களை கிழித்து தொங்கவிட்ட ரிஷப் பண்ட்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் -பேட்டர் ரிஷப் பண்ட் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடுவது பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. ஐபிஎல் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அணிகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் யூகங்கள் அடிப்படையில் சமூக வலைதளங்களில் வெளியாக, அதனை பலரும் பகிர வைரல் ஆகி விடுகிறது. அப்படித் தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரிஷப் பண்ட் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

எக்ஸ் தள பதிவில் ஒருவர், “ரிஷப் பண்ட் ஆர்சிபி அணியை தனது மேலாளர் மூலம் தொடர்பு கொண்டு அந்த அணியின் கேப்டனாக தன்னை நியமிக்க கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை ஆர்சிபி நிராகரித்துவிட்டது. ஆர்சிபி அணியில் ரிஷப் பண்ட் இடம்பெறக்கூடாது என்று விராட் கோலி அரசியல் செய்துவிட்டார். இதே நிலை அவருக்கு இந்திய அணியிலும் இடம்பெறலாம்,” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து விளக்கம் அளித்த ரிஷப் பண்ட், “போலி செய்தி. சமூக வலைதளங்களில் ஏன் இதுபோன்ற போலி செய்திகளை பரப்புகின்றீர்கள்? கொஞ்சம் அறிவுப்பூர்வமாக இருங்கள், இது மிகவும் மோசமாக உள்ளது. எந்த வித காரணமும் இன்றி நம்பிக்கையற்ற சூழலை உருவாக்கிவிடாதீர்கள். இது முதல்முறை இல்லை, மேலும் இது கடைசியாகவும் இருக்காது, எனினும் இதைப் பற்றி நான் பேச வேண்டியாகிவிட்டது.”

“உங்களது தகவல்களை தயவு செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இது மிகவும் மோசமாக மாறி வருகிறது. இதைமீறி உங்களிடம் தான் உள்ளது. இது உங்களுக்கானது மட்டுமல்ல, தவறான தகவல்களை பரப்பி வரும் மற்றவர்களுக்கும் தான்,” என்று குறிப்பிட்டார்.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

17 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

18 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

21 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

22 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

22 hours ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago