திருடப்போன இடத்தில் நகை மற்றும் பணத்தை மட்டுமே குறி வைக்காமல், வீட்டின் சமையலறைக்குள்ளும், ஃப்ரிட்ஜிற்குள்ளும் இருந்த பக்கோடவை ருசித்து சாப்பிட்டுவதை வழக்கமாக வைத்து வரும் திருட்டு கும்பல் பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியில் தினசரி திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாக போலீஸாருக்கு புகார்கள் குவிந்து வந்ததை அடுத்து அங்கே கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. திருட்டு கும்பலை கையும் களவுமாக பிடிக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறார்கள்.
ஒரே பகுதியில் ஆறு, ஏழு வீடுகளில் ஒரே மாதிரியான திருட்டு சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. இதனால் கைவரிசை சம்பவங்களில் ஒரு குறிப்பிட்ட கும்பல் தான் ஈடுபட்டு வந்திருக்குமோ? என்ற சந்தேக வலுக்கத்துவங்கியது.
தாங்கள் செல்லும் வீடுகளில் நகைகள், பணங்களை திருடுவதற்கு முன்னர் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை தின்பதை வழக்கமாக வைத்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள் சிகிரெட் பிடித்தும், குட்கா போதை வஸ்துக்களை பயன்படுத்தி வருவதையும் தங்களது ஸ்டைலாக வைத்திருக்கின்றனர். களவு நடந்த வீடுகளில் பான் பீடா எச்சில் கரைகள் தென்பட்டுருக்கிறது.
இதில் அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி சிரிப்பை வரவழைத்த விஷயமாக பார்க்கப்படுவது வீடுகளிலிருந்த பக்கோடாவை குறி வைத்து தின்று வந்திருக்கின்றனர். பல இடங்களில் கைவரிசை காட்டி வரும் இந்த பக்கோடா கொள்ளை கும்பலை விரைவில் பிடித்தும், அவர்களால் நிலவி வரும் அச்சத்தை போக்க வழி செய்ய வேண்டும் என நொய்டா மக்கள் தொடர்ந்து கோரிக்கை வருகின்றனர்.
கான்பூரில் நடைபெற்ற இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை…
வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய வீரர்களில் ஒருவர் யஷஸ்வி…
மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.…
தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…