இந்தியா அணியின் கிரிக்கெட் கேப்டனான ரோகித் சர்மா வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. நடந்து முடிந்த இந்த போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து t20 தொடர்களில் இந்திய அணி விளையாடுகின்றது. இந்த தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற இருக்கின்றது.
இதனை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 16-ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்நிலையில் இந்த தொடருக்காக இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தீவிரமாக வலைப்பயிற்சியில் இறங்கி இருக்கின்றார்.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றுதான் கூற வேண்டும். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற வெறியில் ரோகித் சர்மா இறங்கி இருக்கின்றார். இதனால் தீவிர வலை பயிற்சியில் ரோகித் சர்மா ஈடுபட்டு வருகின்றார்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த போட்டியை தொடர்ந்து ரோகித் சர்மா ஐந்து நாள் கொண்ட ஆஸ்திரேலியக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கின்றார். ஆனால் அந்த போட்டியில் முதல் 2 போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும், அதற்கு அடுத்து நடைபெறும் 3 போட்டிகளில் ரோஹித் சர்மா கலந்து கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த இரண்டு போட்டிக்கு பும்ரா கேப்டனாக இருந்து இந்திய அணியை வழி நடத்துவார் என்று பிசிசிஐ தெரிவித்திருக்கின்றது.
POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…
கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…
ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…
வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…
சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…
இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…