Categories: Cricketlatest news

சூப்பர் மேனாக ரோகித்.. சூப்பர் கேட்ச் பிடித்து அசத்தல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. மழை மற்றும் மோசமான ஆடுகளம் காரணமாக இந்த ஆட்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (செப்டம்பர் 30) காலை துவங்கியது. இன்றைய ஆட்டத்தின் துவக்கத்திலேயே மேஜிக் செய்த பும்ரா வங்கதேசம் அணியின் முஷ்பிகுர் ரஹிம் விக்கெட்டை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து வங்கதேசம் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.

அந்த வரிசையில், வங்கதேசம் அணியின் ஐந்தாவது விக்கெட்டாக லிட்டன் தாஸ்-ஐ முகமது சிராஜ் கைப்பற்றினார். ஆனால், இந்த விக்கெட் ரோகித் சர்மாவின் துரித செயல்பாட்டால் மட்டுமே சாத்தியமானது. குறிப்பிட்ட பந்தை சிராஜ் வீசும் போது 30-யார்டு வட்டத்தில் ரோகித் சர்மா நின்றுக் கொண்டிருந்தார். பந்து உற்று நோக்கிய லிட்டன் தாஸ் அதனை ஓங்கி அடிக்க முயன்றார்.

எனினும், அவரது டைமிங் மிஸ் ஆக லிட்டன் தாஸ் அடித்த பந்து நேரடியாக ரோகித் சர்மாவின் தலைக்கு மேல் சென்றது. இதனை சரியாக சுதாரித்துக் கொண்ட ரோகித் சர்மா தரையில் இருந்து ஒற்றை ஜம்ப் செய்து ஒரே கையில் பந்தை லாவகமாக பிடித்துக் கொள்ள களத்தில் இருந்த இந்திய வீரர்கள், பந்தை அடித்த லிட்டன் தாஸ் வரை அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இறுதியில் அந்த கேட்ச் விக்கெட்டாக மாற லிட்டன் தாஸ் நடையை கட்டினார்.

ரோகித் சர்மா தரையில் இருந்து காற்றில் மிதந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. போட்டியில் இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் ஆட்டம் கூட மீதியில்லாத சூழலில், இந்திய அணி இந்த போட்டியில் முடிவை எதிர்நோக்கி விளையாடி வருகிறது.

Web Desk

Recent Posts

பெரியாரின் தொண்டனாக பெருமை…உதயநிதியை வாழ்த்திய நடிகர் சத்யராஜ்…

தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி…

1 hour ago

துவங்கியது நான்காம் நாள் ஆட்டம்…வங்கதேசம் தடுமாற்றம்…

இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர்…

2 hours ago

பிஎம் ஜெய் திட்டம்.. மோடிக்கு பறந்த கடிதம்.. முக்கிய ஹைலைட்ஸ்

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் கீழ்,…

2 hours ago

குறைந்தது விலை!…தாக்கம் கொடுத்த தங்கம்…இந்த நிலை நீடிக்குமா?…நகைப்பிரியர்கள் ஏக்கம்…

சர்வதேச பொருளாதார நிலை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பினைக் கொண்டே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. இதனால் தான்…

2 hours ago

வெளியான அதிரடி உத்தரவு.. இனி 15 நாட்களில் பட்டா மாற்றிக் கொள்ளலாம்..!

தமிழ்நாட்டில் நில உரிமையாளர்களுக்கு வருவாய் துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. பட்டா எனப்படும் இந்த ஆவணத்தில் குறிப்பிட்ட இடத்தின்…

2 hours ago

ஐபிஎல் 2025: RCB ஜெயிக்க இதை செய்யனும்!

ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. முன்னதாக ஐபிஎல் 2025 குறித்த ஆலோசனை கூட்டம்…

3 hours ago