டிமேட் கணக்குஇந்தியப் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு, வசதியான, பாதுகாப்பான மற்றும் திறமையான பரிவர்த்தனை முறையை வழங்குவதற்கு டிமேட் கணக்குகள் அவசியமானதாக இருந்து வருகிறது. டிமேட் அக்கவுண்ட்ஸ்கள் வர்த்தகம் செய்வதை எளிதாக்குகின்றன, முதலீடுகளைக் கண்காணிக்கின்றன மற்றும் முதலீட்டாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றது.
இதற்கு எடுத்துக்காட்டாக, பங்குகளை வாங்க விரும்பும் முதலீட்டாளர் ஒரு டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும், அதில் பங்குகளை வாங்கிய பிறகு டெபாசிட் செய்ய வேண்டும். இந்த டிஜிட்டல் செயல்முறை உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை நிர்வகிப்பதையும் பெறுவதையும் எளிதாக்குகிறது.
கடந்த மாத நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 11.45 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஓராண்டில் மட்டும் 43% அதிகரித்துள்ளதாக மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) புள்ளி விவரம் கூறுகிறது.
ஆனாலும் உலகின் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு பார்த்தால் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் டிமேட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 8 சதவீதமாகத்தான் உள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்லுகிறது . டிமேட் கணக்கு வைத்திருப்பவர்களில் அதிக அளவாக 2.31 கோடியுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
நாட்டின் பொருளாதாரத் தலைநகராக மும்பை இருந்து வரும் காரணத்தால் மகாராஷ்ட்ரா முதலிடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அம்மாநிலத்திற்கு அடுத்தபடியாக குஜராத் மாநில வாசிகளிடம் 18 கோடி டிமேட் கணக்குகள் இருப்பதாகவும் தெரியபடுத்தப்பட்டிருக்கிறது. உத்தர பிரதேசம் இந்தப் பட்டியலில் 1.04 கோடி கணக்குடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்த 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 1 கோடிக்கும் மேல் டிமேட் கணக்கு வைத்திருக்கின்றனர்.
ராஜஸ்தான், கர்நாடகா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தலா 50 லட்சம் முதல் 66 லட்சம் டிமேட் கணக்குகளை வைத்திருக்கின்றனர்.
இதில் தமிழ்நாடு 59.39 லட்சம் கணக்குகளுடன் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது. பிஹார், ஹரியானா, தெலங்கானா, கேரளா, பஞ்சாப், ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தலா 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்துள்ளனர்.
இதில் மிகக் குறைந்த அளவாக லடாக் யூனியன் பிரதேசத்தில் வெறும் 242 பேரிடம் மட்டுமே டிமேட் கணக்குகள் உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.
அனராக் எஃப்ஐசிசிஐ அன்மையில் இந்தியாவில் சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் குறித்த ஆய்வினை நடத்தியிருக்கிறது. கொரோனா தொற்று காலத்திற்கு முன்னர்…
அரசு கொடுக்கும் இலவச வீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசிடம் இருந்து சொந்தமாக வீடு வாங்கும்…
ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்யும் வசதியை தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்திருந்தது. இது தொடர்பான தகவலை நாம் தெரிந்து…
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக லாபம் கிடைக்கின்றது. இது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து…
தங்கத்தின் விலை நாள் தோறும் தொடர்ச்சியாக கண்காணிகப்பட்டு வரப்படுகிறது. தங்கத்தை போலவே தான் வெள்ளியின் விலையும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.…
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்:…