ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யாவின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அளித்து கௌரவப்படுத்தி இருக்கின்றார்.
இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான 22 வது வருடாந்திர உச்சி மாநாடு ரஷ்யா மாஸ்கோவில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலமாக நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றார். பின்னர் ரஷ்யா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடியை காரில் அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை வரவேற்ற ரஷ்ய அதிபர் புதின் இரவு விருந்து ஒன்றை வழங்கி இருந்தார். இதற்கிடையே மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் நரேந்திர மோடி இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வணிகம், எரிபொருள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக பல ஆலோசனைகள் மற்றும் பணியாற்ற பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டது.
இந்நிலையில்ரஷ்யாவில் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் ஆர்டர் ஆப் செயிண்ட் ஆண்ட்ரூ த அபோஸ்தல் விருதினை அதிபர் புதன் பிரதமர் மோடிக்கு அளித்து கவுரவித்தார். இந்த உயரிய விருதை இந்திய மக்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் என்று பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது.
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…
கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…
பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…
இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…