Categories: latest newstamilnadu

காத்திருந்த செந்தில் பாலாஜி… 47-வது முறையாகவும் நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்…!

செந்தில் பாலாஜி வழக்கில் 47 வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். இந்த வழக்கு தொடர்பாக வங்கியின் கணக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டு அமலாக்கத்துறை வங்கிக்கு அனுப்பிய கடிதத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி இந்த ஆவணங்களை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆவணங்களை பெறுவதற்காக செந்தில் பாலாஜியை இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு அந்த வங்கி சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் புதிய இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும் அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகவும், தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளதால் அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மனதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி இவ்விரு மனுக்களுக்கும் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை 18-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருக்கின்றார். இதனால் மீண்டும் 47-வது முறையாக அவர் நீதிமன்ற காவலுக்கு சென்று இருக்கின்றார்.

Ramya Sri

Recent Posts

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

6 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

28 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

1 day ago