துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய வீரர்கள் மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள பயனுள்ள ஒன்றாக மாறி வருகிறது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர்களில் பெரும்பாலானோர் முதற்கட்ட துலீப் கோப்பை தொடரில் விளையாடினர். சிலர் இரண்டாம் கட்ட போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில், வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறாத காரணத்தால் ஸ்ரேயஸ் அய்யர் இந்தியா டி அணியின் கேப்டனாக துலீப் கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் சொதப்பியது, அவர்மீது விமர்சனங்களை ஈர்த்துள்ளது.
இந்தியா சி அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் முறையே 9 மற்றும் 54 றன்களை மட்டுமே எடுத்தார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் ஏழு பந்துகளை எதிர்கொண்ட அய்யர் ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். ஸ்ரேயஸ் அய்யரின் மோசமான ஆட்டம் குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“ஒரு கிரிக்கெட்டராக அவரை இப்படி பார்க்க வருத்தமாக இருக்கிறது. முன்பக்கமாக அவுட் ஆகின்றீர்கள் என்றால் போதிய கவனம் செலுத்தவில்லை என்றே அர்த்தம். குறிப்பாக சிவப்பு பந்து போட்டிகளில் இப்படியான கவன சிதறல்கள் இருக்கவே கூடாது. உலகக் கோப்பை தொடரில் அவர் இரண்டு சதங்களை விளாசியுள்ளார், மேலும் ஐபிஎல்-இல் அவர் கோப்பையை வென்ற கேப்டனாக இருக்கிறார்.”
“இவற்றை பார்த்த ஒருத்தர் இங்கு குறைந்தபட்சம் 1000-200 ரன்களை அடித்திருக்க வேண்டும். அய்யர் ஒருவிஷயத்தில் ராசிக்காரர் தான். இந்த தொடரில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இடம்பெறவில்லை. அய்யருக்கு இனியும் சிவப்பு பந்து கிரி்க்கெட்டில் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. அவர் பவுண்டரிகளை அடிக்கவே விரும்புகிறார். அவர் இப்படி நினைக்கக்கூடாது.”
“உலகக் கோப்பையில் இரண்டு சதங்களை விளாசியதால், அவர் தன்னை விராட் கோலி என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. அவரை விரும்பும் இந்திய ரசிகர்கள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் இந்திய தேர்வுக்குழுவில் இருந்தால், நிச்சயம் அவரை துலீப் கோப்பையில் விளையாட தேர்வு செய்திருக்க மாட்டேன். அவர் போட்டிக்கு மரியாதை கொடுக்க மறுக்கிறார்,” என்று பசித் அலி தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…