வெஸ்ட் இன்டீஸ் சுற்று பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய அணி, டெஸ்ட் தொடரை தெடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறது. இது மட்டுமின்றி டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இன்டீஸ் மற்றும் இந்தியா அணிகள் மோத இருக்கின்றன. டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை குவிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வித அணிகளிலும் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விதம், கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. சமீபத்திய டெஸ்ட் போட்டிகளின் மூன்று இன்னிங்ஸ்-இல் சுப்மன் கில் வெறும் 29 ரன்களையே குவித்து இருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில் சராசரி 65.55 ஆகவும், டி20 போட்டிகளில் 40.40 ஆகவும், டெஸ்ட் போட்டிகளில் வெறும் 19 ஆகவே இருக்கிறது. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியிலும் சுப்மன் கில் வெறும் ஏழு ரன்களை அடித்து பெவிலியன் திரும்பினார். இவரது ஆட்டம் ஏன் இப்படி இருக்கிறது, இவர் எங்கு தவறு செய்கிறார் என்று முன்னாள் இந்திய அணி பேட்டர் WV ராமன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“அவர் பந்து வீச்சுக்கு முன்பே ஷாட் அடிக்க சவுகரியமான பொசிஷனுக்கு மாறுவதை என்னால் பார்க்க முடிகிறது. மேலும் அவர் இதனை வெகு விரைவில் செய்துவிடுகிறார். இவ்வாறு ஆகும் போது சில நாட்கள் அதிக சிறப்பானதாகவும், சில நாட்கள் மிகவும் மோசமாகவும் மாறும். சில நாட்களில் இவ்வாறு செய்வது பவுலிங்கிற்கு ஏற்ப சின்க் ஆகும், அதிக ரன்களை குவிக்க செய்யும். சமயங்களில் இந்த நிலை தலைகீழாக மாறும்.”
“சமீபத்திய பேட்டர்களில் பலரும், பேட்டை வீசுவதற்கு கீழே இருக்கும் கை-இன் பலத்கை பயன்படுத்தி, டவுன் ஸ்விங் செய்கின்றனர். இதுபோன்ற செயல்பாடு அதிக ரன்களை அடிக்க ஒத்துழைக்காது. இவ்வாறு செய்யும் போது பேட் உடல் வழியே செல்லும் என்பதால், பேட்-இன் முகம் மூடப்பட்டு, பேட் பந்தை சந்திக்கும் வாய்ப்பு அதிகளவில் குறைந்துவிடும்,” என்று தெரிவித்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சுப்மன் கில் மிகவும் ஆக்ரோஷமான பேட்டர்-ஆக உருவெடுத்து இருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களமிறங்கிய சுப்மன் கில் 851 ரன்களை குவித்து அசத்தினார்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…