தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து இருக்கும் வன்முறைகளால் தமிழகமெங்கும் இருக்கும் ரவுடிகள் குறித்து பட்டியலை காவல்துறை தயாரிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பட்டியல் தயாரான நிலையில் போலீசார் அவர்களை கண்காணிக்கும் பணியையும் தீவிரப்படுத்தி இருக்கின்றனர். இந்நிலையில், இதுவரை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் உருவாக்கப்பட்டு உள்ளதாம். இதில் குறிப்பிட்ட 400 ரவுடிகளுக்கு மட்டும் ஒரு போலீசார் விதம் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
மேலும், ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் பட்டியலில் இருக்கும் ரவுடிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட இருக்கின்றனர்.
இதில் எதுவும் பிரச்னை தென்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல சென்னையிலும் ரவுடிகளின் பட்டியல் தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…
கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…
பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…
இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…