Categories: indialatest news

பெற்றோர், குழந்தைகள், மாமியார் மாமனாருடன் நேரம் செலவிட ‘ஸ்பெஷல் ஹாலிடே’… அரசு அதிரடி அறிவிப்பு…!

பெற்றோர்கள், குழந்தைகள், மாமனார், மாமியார் ஆகியோரிடம் நேரம் செலவிடுவதற்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது.

அசாம் அரசு தனது ஊழியர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக நவம்பர் மாதம் இரண்டு நாட்கள் சிறப்பு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு விடுமுறையில் ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் பெற்றோர்கள், மாமியார் இல்லாதவர்கள் இந்த விடுப்புகளை பெற தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து முதல் அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்ததாவது “அசாம் முதல்வர் டாக்டர் ஹேமந்த விஷ்வா தலைமையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 6 மற்றும் 8-ம் தேதிகளில் மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள், மாமனார், மாமியாருடன் நேரம் செலவிடுவதற்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுப்பு வயதான பெற்றோர் அல்லது மாமனார் மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களை மதிக்கவும் பராமரிக்கவும் பயன்படுத்த வேண்டும். இந்த விடுப்பு தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அல்ல” என்று கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 7ஆம் தேதி சத் பூஜை விடுமுறை , நவம்பர் 9ஆம் தேதி 2-வது சனிக்கிழமை விடுமுறை மற்றும் நவம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை உடன் சேர்த்து சிறப்பு விடுமுறை பெறலாம் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் மற்றும் மாமியார் மாமனார் இல்லாதவர்கள் இந்த தகுதியை பெற மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ramya Sri

Recent Posts

பேச்சு வார்த்தை மூலம் தீர்வு?…சாம்சங் போராட்டம் குறித்து அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை…

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி…

3 days ago

இதை செய்ய மும்பை அணிக்கு இருபத்தி ஏழு ஆண்டுகளா?…திருப்புமுனை தந்த தொடர்…

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய…

3 days ago

வாகை சூடப்போகிறதா?…வாங்கிக் கட்டப்போகுதா?வங்கதேசம்…ஆறாம் தேதி துவங்க உள்ளது அதிரடி…

இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…

3 days ago

பாஜக தமிழிசைக்கு சவால்…தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நடிகர்…

நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…

3 days ago

புரட்டாசி சனிக்கிழமை…பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…

தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…

3 days ago

இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…

தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…

3 days ago