இலங்கை அணிக்கெதிரான தொடரில் இருந்து கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டமிட்டிருக்கிறது.
ஜிம்பாப்வே தொடருக்குப் பின் இந்திய அணி இம்மாத இறுதியில் இலங்கை செல்ல இருக்கிறது. ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரைக்கும் நடக்கும் தொடரில் இந்திய அணி தலா 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 உலகக் கோப்பைக்குப் பின்னர் ஓய்வு அறிவித்துவிட்ட்டனர். அதேநேரம், பும்ரா தொடர்ந்து விளையாட இருப்பதாக அறிவித்திருந்தார். இந்தநிலையில், இலங்கை தொடரில் இருந்து இவர்கள் மூவருக்கு ஓய்வளிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
செப்டம்பர் மாதம் வங்கதேச அணியின் சுற்றுப்பயணத்தோடு தொடங்க இருக்கும் ஹோம் சீசனுக்கு அவர்கள் தயாராகும் பொருட்டே இந்த ஓய்வை வழங்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இலங்கை தொடருக்கான வீரர்களைத் தேர்வு செய்ய, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இலங்கை சீரிஸுக்கு முன்பாக இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்கிற கேள்விக்கும் விடை தெரியவரும்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…