Categories: indialatest news

வெறி நாய் கடித்து பதினெட்டு மாத குழந்தை பலி…சோகத்தில் உறைந்த இந்தியாவின் முக்கிய நகரம்…

செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பது மனித வாழ்வில் சகஜமான ஒன்றாக இருந்து தான் வருகிறது. வாய் பேச இயாலாத இந்த உயிரினங்களும் தங்களை வளர்த்து வரும் எஜமான்கள் மீது அதிக பாசம் கொண்டு இருந்தும் வருகிறது.

தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல இந்த ஜீவராசிகளை நினைத்து செல்லும் இடங்களுக்கெல்லாம் தங்களோடு அழைத்து செல்வதையும் பழக்கமாக பலரும் கடைபிடித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக நாய்கள் வளர்ப்பில் அதிகம் பேர் ஆர்வம் காட்டி வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் வீட்டில் உள்ள குழந்தைகள் வீட்டு வளர்ப்பு போலவே தெரு நாய்களும் இருக்கும் என்கின்ற அறியாமையில் அவற்றுடன் விளையாடத் துவங்கி விடுகிறார்கள். பல நேரங்களில் இது விபரீத விளைவுகளை தந்தும் விடுகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையை தெரு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் நெஞ்சை பதைபதைக்கச் செய்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதிராபாத்தின் அருகே இருக்கும் புறநகர் பகுதியான ஜவஹர் நகரில் ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை தெருவில் விளையாடிக்கொண்டிருந்துள்ளது.

dog bite file picture

அப்போது அங்கே வந்த தெரு நாய்கள் குழந்தையை கடித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் குழந்தையின் தலை முடியை  வாயில் கவ்வியவாரே சிறிது தூரத்திற்கு இழுத்துச்சென்றுள்ளது. அதனை தொடர்ந்தும் குழந்தையை கடித்து வந்துள்ளது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் நாய்களை விரட்டி அடித்து குழந்தையை மீட்டு பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு சிகிட்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தெரு நாய்கள் கடித்து பதினெட்டு மாதங்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sankar sundar

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

4 hours ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

4 hours ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

7 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

8 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

8 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

9 hours ago