Categories: latest newstamilnadu

தமிழகத்தில் கோவில் நிதியை எப்படி செலவு செய்றீங்க… உச்சநீதிமன்றம் கேள்வி…!

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றது. அதில் வரும் நன்கொடை நிதி எப்படி செலவிடப்படுகின்றது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கின்றது.

தமிழகத்தில் கோயில்களுக்கு எப்போதுமே பஞ்சம் கிடையாது, ஆயிரக்கணக்கான கோவில்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அரசே அறநிலையத்துறை மூலமாக நிர்வகித்து வருகின்றது. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 612 கோயில்கள் இருக்கின்றன. தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருகின்றது.

அதில் அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்று இருக்கின்றார். அவர் பொறுப்பேற்றது முதல் கோவில் சொத்துக்களை மீட்பது கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது என்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பாஜகவினர் கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாக திமுக மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை என்ற துறையை இருக்காது என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கோவில் நிதிகள் மறைமுகமாக முறைகேடு செய்யப்படுவதாக ஆலயம் காப்போம் பவுண்டேஷன் என்ற அமைப்பு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தது. அதில் தமிழகத்தில் உள்ள 38000 கோயில்களில் பெரும்பாலான கோயில்களுக்கு அறங்காவலர்கள் கிடையாது. மறைமுகமாக கோவில் நிதிகளில் இருந்து முறைகேடுகள் செய்யப்படுகிறது. கோவில் நிதியை இந்து சமய அறநிலை துறை அறக்கட்டளைக்கு மாற்றியதை திரும்ப கோயிலுக்கே வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணை செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு வரும் உண்டியல் காசுகள் மற்றும் நன்கொடைகளை செலவிடுவதற்கு முறைப்படுத்தப்பட்ட திட்டம் ஏதேனும் இருக்கின்றதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் ஆயிரக்கணக்கான கோயில்களில் வரும் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகின்றது என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றார். விரைவில் தமிழக அரசு சார்பில் இருந்து விரிவான விவாதங்கள் விரைவில் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ramya Sri

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

16 mins ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

31 mins ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

3 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

4 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

4 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

5 hours ago