மாதவிடாய் விடுப்பு வழங்குவது பெண்களின் வேலையை பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மாதவிடாய் விடுப்புக்கான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு இது தொடர்பாக உத்திரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் இன்று விசாரணை செய்தார். அப்போது பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்குவது அவர்களை ஒதுக்கி வைக்க வழி வகுக்கும்.
மாதவிடாய் விடுப்பு வழங்குவது கட்டாயம் என்று அறிவித்தால் அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறையும். நாங்கள் அதை விரும்பவில்லை. பெண்களை பாதுகாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இப்படி செய்தால் அது அவர்களுக்கு பாதகமாக முடிய வாய்ப்பு இருக்கின்றது என்று தெரிவித்திருந்தார் .
மேலும் மாதவிடாய் விடுப்பு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர் இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடுங்கள் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…