Categories: Cricketlatest news

ஹர்திக்கை முந்தும் சூர்யகுமார் யாதவ்… டி20 கேப்டனாகிறாரா?

இலங்கை தொடருக்கு முன்பாக இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜிம்பாப்வே தொடருக்குப் பின் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. டி20 போட்டிகளிலிருந்து ரோஹித் ஓய்வுபெற்றிருக்கும் நிலையில், அவருக்குப் பின் ஹர்திக் பாண்டியாதான் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஒவ்வொரு தொடரின் போதும் ஹர்திக் விளையாடுவாரா என்கிற கேள்வி எழுவதுண்டு. இந்திய அணிக்கு நிலையான கேப்டன் வேண்டும் என்கிற எண்ணத்தில் ஹர்திக்குக்குப் பதில் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மற்றும் பிசிசிஐ நிர்வாகம் பரிசீலனை செய்வதாகத் தெரிகிறது.

2026 டி20 உலகக்கோப்பை தொடர் வரை சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஹர்திக் பாண்டியாவின் வொர்க் லோடு பற்றிய விவாதம் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, அடுத்தடுத்து நடக்கும் இரண்டு தொடர்களில் ஹர்திக் பாண்டியா விளையாடியது அபூர்வமாகவே நடந்திருக்கிறது.

இதுகுறித்து ஹர்திக் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரிடமுமே பிசிசிஐ நிர்வாகம் பேசியிருக்கிறது. ஆனால், இதுபற்றிய இறுதி முடிவு தேர்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட இருக்கிறது. அதேபோல், ஒருநாள் தொடரில் இருந்து ரோஹித் ஷர்மா பிரேக் கேட்டிருப்பதால் இந்திய ஒருநாள் அணிக்கு யாரை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. கே.எல்.ராகுல் இந்தப் போட்டியில் முந்துவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

AKHILAN

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

5 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

41 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago