விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு வருகிற ஜூலை 10ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் வெளியாகிவிட்டது. தமிழ்நாடு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய புகழேந்தி திடீரென்று உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதி தற்போது காலியாக இருக்கின்றது.
இதனால் வருகிற ஜூலை 10ஆம் தேதி விக்ரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பல கட்சிகளை சேர்ந்த நபர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் தொடர்ந்து இணைப்பு மனு தாக்கல் செய்தார்கள். திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் அணியூர் சிவா போட்டியிடுகின்றார். மேலும் பாஜக சார்பில் சி அன்புமணி போட்டியிடுகின்றார்.
நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா போட்டியிடுகின்றார். தொடர்ந்து அந்த தொகுதியில் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அந்தந்த கட்சிகளை ஆதரித்து தலைவர்கள் பலரும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. மேலும் வருகிற 8-ம் தேதி 6:00 மணிக்குள் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தையும் முடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…