அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வரும் நிலையில் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் இளங்கலை பட்டம் அல்லது தொழிற்கல்வி பயிலும் வரை கொடுக்க தமிழக அரசால் தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக 3.28 மாணவர்களுக்கு 401.47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதில் மாணவர்கள் தகுதி பெற 6ம் வகுப்பு முதல் 12 வரை அரசு பள்ளியில் தான் பயின்று இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் பலன்பெற நினைக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். அல்லது ஆதார் கார்டுக்கு விண்ணப்பம் செய்திருக்க வேண்டியதும் அவசியம். மாணவர்களுக்கு இத்திட்டம் சரியாக சென்று சேர பள்ளி நிர்வாகமும் செயல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…
கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…
பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…
இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…