Categories: latest newstamilnadu

யாருக்கு ஏற்றம்? – தமிழிசை கேள்வி…வேற ஆளேயில்லையா? …திமுகவை விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அமைச்சரவையில் மாற்றம், மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு தனது பாணியில் பதிலளித்தார்.

மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என பதிலளித்திருந்த நிலையில், இதுகுறித்து கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர் தமிழிசை செளந்தரராஜன்,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மூத்த நிர்வாகிகள் இருக்கும்போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா?, என கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் கூறிய மாற்றம் துரை முருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் எனவும் யார் ஏமாறப்போகிறார்கள் என்பது அமைச்சரவையின் மாற்றத்தின் போது தெரியும் என  கருத்து கூறியிருக்கிறார்.

Jeyakumar Udhayanidhi

முதலமைச்சரின் அமைச்சரவை குறித்த பதில்ளை விமர்சித்துள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்ணாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக சங்கர மடம் இல்லை என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சொல்லியதை சுட்டிக் காட்டி பேசினார். அதோடு திமுகவில் கடுமையாக உழைத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி இல்லையா? என கேள்வியும் எழுப்பியிருக்கிறார் .

துணை முதல்வராக உதயநிதியை தவிர வேறு எவருக்கும் தகுதி இல்லையா? எனவும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உதயநிதி துணை முதல்வர் என கொஞ்சம் கொஞ்சமாக கருத்தை விதைத்தனர் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை விமர்சித்துள்ளார். அதோடு தமிழக மீனவர்கள் தொடர்ந்துள்ள பாதிக்கப்பட்டு வருகின்றனர், திமுக அரசுக்கு அதுபற்றி கவலையில்லை எனவும் ஜெயக்குமார் பேசியிருக்கிறார்.

sankar sundar

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago