விடுதலை சிறுத்தைகள் கட்சித தலைவர் திருமாவளவன் நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாடு பங்கேற்க தமிழகத்தின் எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் பேசியிருந்த வீடியோ வெளியாகி பேசும் பொருளானது. இந்த சூழலில் திருமாவளவன் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.
அதன் பின்னர் தேசிய மது விலக்கு கொள்கை குறித்து பேசியிருந்தார் திருமாவளவன். இது குறித்த பேசிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வரை சந்திக்கும் முன்னர் மது விலக்கு மாநாடு விஷயத்தில் சிறுத்தையாக ஆரம்பித்தார் சந்திப்பிற்கு பிறகு சிறுத்துப் போய் விட்டார் என ‘ரைமிங்’காக பேசி திருமாவளவனை விமர்சித்துள்ளார். மாநாடு குறித்து தான் சமீபத்தில் படித்த புதுக்கவிதையை மேற்கோள் காட்டி விமர்சித்தார்.
மரங்களை வெட்டும் கோடாரிகள் எல்லாம், மரம் வெட்ட வேண்டாம் என்ற மாநாட்டில் கலந்து கொண்டனவாம் என தான் படித்த கவிதையை சொல்லி மது ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்பது குறித்த தனது விமர்சனத்தை முன் வைத்தார்.
மது ஒழிப்பு என்ற உயரிய கொள்கையை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தி வருகிறார் திருமாவளவன் என்றும், திருமாவளவன் நடத்த உள்ள இந்த மது ஒழிப்பு மாநாட்டு எந்த வித தாக்கத்தையும் தமிழக மக்களிடம் ஏற்படுத்தப்போவதில்லை, ஆனால் இந்த இரு கட்சிகளுக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை மட்டுமே குறிக்கும் திருமாவளவன் அக்டோபர் மாதம் நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாடு எனவும் பேசினார் பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…