Categories: latest news

என்ன ஆனாலும், இதை மட்டும் செய்யாதீங்க.. மொபைல் பயனர்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

மத்திய டெலிகாம் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்திய மொபைல் போன் பயனர்களுக்கு மிக முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி பயனர்கள் தங்களுக்கு அறிமுகமில்லாத மொபைல் நம்பர்களில் (Unknown Numbers) இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

“அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மக்கள் ஏற்கவே கூடாது. ஒவ்வொரு குடிமகனும் தங்களுக்கு அறிந்த எண்களில் (டெலிபோன்/மொபைல்) இருந்து வரும் அழைப்புகளை மட்டுமே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்,” என்று ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் குற்றங்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது, மத்திய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அறிமுகம் இல்லாத எண்களில் அழைப்புகள் வரும் போது, சம்பந்தப்பட்டவர்கள் முன்கூட்டியே குறுந்தகவல் அனுப்பி இருந்தால் மட்டுமே எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார். மத்திய அமைச்சகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

#Ashwini-Vaishnaw

சமீபத்தில் தான், இந்தியாவில் சஞ்சர் சாதி பெயரில் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவையை கொண்டு ஸ்பேம் அழைப்புகளை குறைக்க முடியும் என்பதோடு, சைபர் குற்றங்களையும் தடுக்க முடியும். இதன் மூலம் இதுவரை 40 லட்சம் சிம் கார்டுகள், 41 ஆயிரம் போலியான பாயிண்ட் ஆஃப் சேல் ஏஜண்ட்கள் முடக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் ஸ்பேம் அழைப்புகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்கு அதிகப்படியான ஸ்பேம் அழைப்புகள் வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் அடங்கும். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் இது தொடர்பாக 36 லட்சம் மொபைல் இணைப்புகள் முடக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் வாட்ஸ்அப் நிறுவம் போலி அழைப்புகளை பெருமளவுக்கு கட்டுப்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் சிஸ்டம்களை மாற்றியமைத்து இருப்பதாக சமீபத்தில் தான் அறிவித்து இருந்தது.

“எங்களின் புதிய கட்டுப்பாடுகள் மூலம், தற்போதைய ஸ்பேம் அழைப்புகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும். எங்களது பயனர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பான அனுபவத்தை வழங்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,” என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

admin

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

2 hours ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago