Connect with us

latest news

டென்னிஸ் உலகின் ஜாம்பவான்… பிரபல வீரர் ரஃபேல் நடால் ஓய்வை அறிவித்தார்…!

Published

on

டென்னிஸ் உலகின் பிரபல ஜாம்பவானாக விளங்கிய ரஃபேல் நடால் தனது ஓய்வை அறிவித்தார்.

ஸ்பெயின் நாட்டின் பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால். இவர் இதுவரை 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றிருக்கின்றார். இவர் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். இந்த வீடியோவானது சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக இந்த வீடியோ அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.

அதில் அவர் கூறியிருந்ததாவது ‘நான் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கின்றேன். கடைசி இரண்டு வருடமும் மிக கடினமாக இருந்தது. என்னால் இதற்கு மேல் விளையாட முடியாது என தோன்றியது. இந்த முடிவு அனைவரும் ஒரு நாள் எடுக்க வேண்டிய முடிவு. இந்த முடிவை நான் எடுப்பதற்கு மிகவும் கடினமாக உணர்ந்தேன் இந்த வாழ்க்கையில் அனைத்திற்கும் ஒரு தொடக்கம் இருப்பது போல் முடிவும் இருக்கின்றது.

என்னுடைய இறுதி போட்டியை நான் என்னுடைய நாட்டிற்காக டேவிஸ் கோப்பைக்காக விளையாட இருக்கின்றேன். அனைவருக்கும் மிக்க நன்றி. என்னுடைய சக வீரர்கள், என்னுடைய அணியினர், அப்பா, அம்மா, மாமா என்னுடைய மனைவி கடைசியாக என்னுடைய ரசிகர்கள் ஆகிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்’ என்று உருக்கமாக பேசியிருந்தார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் மிக வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள் ஓய்வு அறிவித்ததற்கு தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

google news