Categories: latest newsSports

டென்னிஸ் உலகின் ஜாம்பவான்… பிரபல வீரர் ரஃபேல் நடால் ஓய்வை அறிவித்தார்…!

டென்னிஸ் உலகின் பிரபல ஜாம்பவானாக விளங்கிய ரஃபேல் நடால் தனது ஓய்வை அறிவித்தார்.

ஸ்பெயின் நாட்டின் பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால். இவர் இதுவரை 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றிருக்கின்றார். இவர் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். இந்த வீடியோவானது சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக இந்த வீடியோ அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.

அதில் அவர் கூறியிருந்ததாவது ‘நான் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கின்றேன். கடைசி இரண்டு வருடமும் மிக கடினமாக இருந்தது. என்னால் இதற்கு மேல் விளையாட முடியாது என தோன்றியது. இந்த முடிவு அனைவரும் ஒரு நாள் எடுக்க வேண்டிய முடிவு. இந்த முடிவை நான் எடுப்பதற்கு மிகவும் கடினமாக உணர்ந்தேன் இந்த வாழ்க்கையில் அனைத்திற்கும் ஒரு தொடக்கம் இருப்பது போல் முடிவும் இருக்கின்றது.

என்னுடைய இறுதி போட்டியை நான் என்னுடைய நாட்டிற்காக டேவிஸ் கோப்பைக்காக விளையாட இருக்கின்றேன். அனைவருக்கும் மிக்க நன்றி. என்னுடைய சக வீரர்கள், என்னுடைய அணியினர், அப்பா, அம்மா, மாமா என்னுடைய மனைவி கடைசியாக என்னுடைய ரசிகர்கள் ஆகிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்’ என்று உருக்கமாக பேசியிருந்தார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் மிக வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள் ஓய்வு அறிவித்ததற்கு தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Ramya Sri

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

4 hours ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

4 hours ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

4 hours ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

4 hours ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

5 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

5 hours ago