தஞ்சாவூரில் போக்குவரத்து மிகுந்த மருத்துவக் கல்லூரி சாலையில் இளைஞர் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
களிமேடு கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான ஸ்ரீராம், தஞ்சாவூர் மங்களபுரம் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு ஜிகர்தண்டா கடையில் வேலை செய்து வந்தார். நேற்றிரவு 8 மணியளவில் ஸ்ரீராமின் கடைக்கு 6 பேர் கொண்ட கும்பல் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தது.
அந்த கும்பலைப் பார்த்தவுடன் ஸ்ரீராம் கடையில் இருந்து வெளியேறி தப்பியோட முயன்றிருக்கிறார். ஆனால், அவரை துரத்திச் சென்ற கும்பல் சிறிது தூரத்திலேயே அவரை வழிமறித்து அரிவாளால் கொடூரமாகத் தாக்கியது. இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீராம் மயங்கி சரிந்தார். இதையடுத்து அந்த கும்பல் சம்பவ இடத்திலிருந்து சாவகாசமாகத் தப்பிச் சென்றிருக்கிறது.
ஸ்ரீராமின் உடல் மருத்துவக் கல்லூரி சாலையில் கிடப்பது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகிலுள்ள கடைகளின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறார்கள்.
இவர், கடந்த 2022-ல் கொலை செய்யப்பட்ட மாதாகோட்டை பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் லாரா என்கிற சின்னா கொலை வழக்கில் கைதாகி சிறை சென்றவர். பிணையில் வந்த இவர் ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், ஸ்ரீராம் கொலை, சின்னா கொலைக்குப் பழி வாங்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்டதா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…