மும்பையில் ஒரு சிறு பிரச்சனைக்காக தாய் தந்தையரின் கண் முன்னே இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள மாலத் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை ஆகாஷ் என்கின்ற 28 வயதான இளைஞர் புதிய கார் ஒன்றை தசராவை முன்னிட்டு ஷோரூம் இல் இருந்து வாங்கி தனது பெற்றோர்களுடன் புஷ்பா புங்கா அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று ஆகாஷின் காரை ஓவர் டேக் செய்ய முயன்ற போது லேசாக மோதியது.
இதனால் ஆகாஷுக்கும் ஆட்டோ டிரைவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆட்டோ ஓட்டுனரின் நண்பர்கள் அந்த இடத்தில் கூடிய நிலையில் ஆகாஷ் அந்த நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். ஆகாஷை அந்த கும்பல் கீழே தள்ளி அடித்து உதைத்தது. இதனை தடுப்பதற்கு ஆகாஷின் தந்தையும் தாயும் முற்பட்டார்கள். தனது மகனை காப்பாற்றுவதற்காக ஆகாஷ் மீது அவரது தாய் அப்படியே அரணாக படுத்து கொண்டார்.
இருப்பினும் அடி உதை நின்ற பாடில்லை. கடைசியாக ஆகாஷை உயிர் போகும் அளவுக்கு அடித்த பின்னர்தான் அந்த கும்பல் ஓய்ந்திருக்கின்றது. ஒவ்வொருவரின் காலிலும் அவரின் தந்தை விழுந்து அடிக்க வேண்டாம் என்று மன்றாடினார், தாயோ கதறி அழுதார். இருப்பினும் அவர்கள் விட்டப்பாடு இல்லை.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். ஆகாஷ் மீது தாக்குதல் நடத்திய வீடியோவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலானது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் பெறும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…
கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…
ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…
வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…
சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…
இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…