சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கர்நாடகா அரசு எடுத்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தலின் பெயரில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகா அரசு அறிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் அனைத்து தமிழக சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதன்படி காவிரி நீரை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முதல் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் எஸ் பி வேலுமணி, ஒ எஸ் மணியன் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் செல்வபெறுந்தொகை , பாஜக சார்பில் கரு நாகராஜன், பாமக சார்பில் ஜிகே மணி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டு கர்நாடகா தண்ணீர் திறந்து விடுவது குறித்து பேசி இருந்தார்கள்.
இந்த கூட்டத்தில் கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விடாததால் விவசாயிகள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசின் முடிவை ஏற்க முடியாது. பருவ மழை சாதகமாக இருக்கும் சூழலில் கர்நாடகா அரசின் இந்த செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது ” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…