Categories: latest newstamilnadu

திட்டமிட்டு கொல்லப் பார்த்தனர் – பகீர் கிளப்பிய சாட்டை துரைமுருகன்

தன்னை இந்த அரசு திட்டமிட்டு கொல்லப் பார்த்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான சாட்டை முருகன் செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் மீது புகார் எழுந்தது. கருணாநிதி குறித்து அவர் பாடல் பாடியது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இந்தநிலையில், சாட்டை துரைமுருகன் மீது திருச்சி மாவட்ட திமுக ஐடி விங் பொறுப்பாளர் அருண் என்பவர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாகப் புகார் அளித்தார். இதையடுத்து, சாட்டை துரைமுருகன் மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து, தென்காசியில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அவரைக் கைது செய்தனர்.

கைது செய்து திருச்சி கொண்டுவரப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டது. இதையடுத்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அனுப்பும்படி போலீஸ் கோரியது. ஆனால், இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, சாட்டை துரைமுருகனை விடுவித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து விடுதலையான சாட்டை துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், `நான் பாடிய பாடல் என்னுடையது அல்ல. அது அதிமுகவுடையது. என் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவேன். இந்த அரசு என்னைத் திட்டமிட்டு கொலை செய்யப் பார்த்தது’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

AKHILAN

Recent Posts

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

60 mins ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

1 hour ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

2 hours ago

INDvsBAN டி20 தொடர்.. இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…

3 hours ago

ஐபிஎல் 2025: வீரர்களுக்கு ஜாக்பாட், ஜெய் ஷா கொடுத்த பயங்கர அப்டேட்..!

ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு…

3 hours ago

ஐபிஎல் 2025: Retention ரூல்ஸ்.. எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்.. முழு விவரங்கள்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது.…

4 hours ago