திருடச் சென்ற கடையிலிருந்த ஐஸ்கிரீமை கையோடு களவாடிய சம்பவத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்ட டூவிபுரத்தில் பால் மொத்த வியாபாரக் கடை நடத்தி வருகிறார் பெருமாள். தூத்துக்குடி நகரின் முக்கிய பகுதியில் இந்தக் கடை அமைந்துள்ளதால் எப்போதுமே பரபரப்பாகவே காணப்படும்.
இந்நிலையில் எப்போதும் போல இரவு கடையைப் பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். நள்ளிரவு இரண்டு முப்பது மணியளவில் ‘புள்ளிங்கோ’ கெட்-டப்பில் இருக்கும் இளைஞர்கள் இரண்டு பேர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றிருக்கின்றார்கள். தூத்துக்குடி நகரின் பல கடைகளுகு பால், தயிர், மோர் வகைகளை சப்ளை செய்யும் மொத்த கடை இது என்பதால் கல்லாவில் பணம் அதிகமாக இருக்கும் எனக்கூட எண்ணியிருக்கலாம் திருடச் சென்ற நபர்கள்.
பால் வியாபாரம் என்பதால் தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் கடையை திறந்து விடுவாராம் பெருமாள். நள்ளிரவு கடைக்குள் நுழைந்த திருடர்கள் கடையின் கல்லாவிலிருந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச்சென்றுள்ளனர். மேலும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறை கட்டுகளை அங்கிருந்து எடுத்தவர்கள் அதனை தூக்கி எறிந்த காட்சிகள் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
பணத்தை திருடியவர்கள் அதோடு நிறுத்திக்கொள்ளாமல் கடையில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த கோன் ஐஸ் வகைகளையும் திருடிச் சென்றிருக்கின்றனர். அறுபது ரூபாய் மதிப்பிலான இந்த கோன் ஐஸ் வகைகளில் பத்து முதல் பதினைந்தை கையோடு எடுத்துச் சென்றது சிசிடிவி பதிவில் தெரிந்திருக்கிறது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…