தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மகேஸ்வரம் கிராமத்தில் நடந்த களவு முயற்சி சிரிப்பை வரவழைத்துள்ளது. கிராமத்தில் உணவகம் ஒன்றில் தான் இந்த திருட்டு சம்வத்திற்கான முயற்சி நடந்துள்ளது. விற்பனை முடிந்தது எப்போதும் போல ஹோட்டலை மூடிவிட்டு சென்றிருக்கிறார் கடையின் உரிமையாளர்.
கிராமம் என்பதால் இரவு நேரத்தில் மக்கள் கூட்டம் இல்லாமல் இருந்திருக்கிறது. திருடும் நோக்கத்தில் அங்கே வந்த நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த கம்பியை வைத்து கடையின் பூட்டை திறந்திருக்கிறார். அதன் பின்னர் சுற்றுலா செல்வது போல கடை முழுவதும் ரவுண்டு அடித்துருக்கிறார். சிறிது நேரம் கழித்து தான் வந்த காரியத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதால் கடையின் கல்லாவில் தனது கைவரிசையை காட்டியிருக்கிறார்.
தான் கஷ்டப்பட்டு உழைத்த பணம் இப்படி ஏதாவது வழியில் தொலைந்து போகிவிடக்கூடாது என உஷாராக நினைத்திருந்த கடையின் உரிமையாளர் ஒரு ரூபாயைக் கூட கல்லாவில் வைக்காமல் எடுத்துச் சென்றிருக்கிறார். கடை முழுவதும் காசு, பணம் ஏதாவது தென்படுமா? என்ற ஆவலோடு சமையலறைக்குள் சென்ற முகத்தை மறைத்துக் கொண்டு திருட வந்த திருட்டு ஆசாமி, எங்கும் பணமில்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் கடை பிரிட்ஜில் இருந்த கூல்டிரிங்க்ஸை எடுத்து குடித்துள்ளார்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனது பர்ஸிலிருந்து இருபது ரூபாயை கடை கல்லாப்பெட்டியில் வைத்து விட்டு வெளியேறியிருக்கிறார். சிரிப்பை வரவழைக்கக் கூடிய இந்த திருட்டு முயற்சி கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்திருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வர, இதனைப் பார்த்தவர்கள் தங்கள் சிந்தனைக்கு வந்ததை எல்லாம் கருத்தாக பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…