மது ஒழிப்பு மாநாடு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் பேசியிருந்த வீடியோ வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா துணை முதல்வர் பதவி குறித்து பேசியிருந்தது தமிழக அரசியலில் எழுந்த பரபரப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கருத்து தெரிவித்திருந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே இது குறித்து சொல்ல முடியும் என பதிலளித்தார்.
கூட்டணி விசயத்தில் கட்சித்தலைமை தான் முடிவெடுக்கும் அதில் தான் தலையிட மாட்டேன் என ஆதவ் அர்ஜுனா சொல்லியிருப்பதாகவும் திருமாவளவன் சொல்லியிருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனான விடுதலை சிறுத்தைகளின் கூட்டணியில் எந்தவித சிக்கலும் இப்போது வரை இல்லை என்றும், இனியும் எழாது எனவும் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை மட்டுமல்லாது 2029ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையும் மனதில் கொண்டும் கட்சி நலன், மக்கள் நலன் ஆகியவற்றையும் மனதில் கொண்டு தான் கூட்டணி குறித்த முடிவுகள் எடுக்கப்படும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பின் போது பேசியிருந்தார்.
அதோடு மதுஒழிப்பு மாநாட்டில் பல்வேறு கட்சிகளின் மகளரணி தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளதாகவும், தமிழ் நாட்டில் முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த கோரியும், தேசிய அளவிலும் இதையே நடைமுறைப்படுத்த கோரியும் தான் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது என்றும் திருமாவளவன் சொல்லியிருக்கிறார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…