Categories: indialatest news

அப்பாவி உயிர்கள் பலியாவதை ஏற்க முடியாது – புடினை சாடினாரா மோடி?!

ரஷ்ய அதிபர் புடினுடனான சந்திப்பு முடிந்து ஒரு நாளே ஆன நிலையில், இது போருக்கான நேரம் அல்ல; அப்பாவி உயிர்கள் பலியாவதை ஏற்க முடியாது என உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு ஆஸ்திரிய தலைநகர் வியன்னா சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் கார்ல் நெஹாம்மரை சந்தித்து இருநாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்குப் பின் பேசிய பிரதமர் மோடி, `தற்போதைய சூழலில் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து நானும் அதிபர் நெஹாம்மரும் விவாதித்தோம். உக்ரைன் போர், மேற்கு ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் சூழல் குறித்தும் பேசினோம். நான் ஏற்கனவே சொன்னதுபோல இது போருக்கான நேரம் அல்ல. போர்க்களத்தில் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது. அப்பாவி உயிர்கள் எங்கு பலியானாலும் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று தெரிவித்தார்.

ஆஸ்திரியாவும் இந்தியாவும் இருநாடுகள் உறவுகள் மேம்பாடு குறித்தும் அமைதி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தின. இந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 41 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரியா சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் என்கிற பெருமை பெற்றிருக்கும் மோடி, நாட்டோவில் உறுப்பினர் அல்லாத ஐரோப்பிய நாட்டுத் தலைவருடனான சந்திப்புக்குப் பின் ரஷ்யாவின் நடவடிக்கைகளை சுட்டிக் காட்டிப் பேசியிருக்கிறார்.

AKHILAN

Recent Posts

பேச்சு வார்த்தை மூலம் தீர்வு?…சாம்சங் போராட்டம் குறித்து அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை…

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி…

3 days ago

இதை செய்ய மும்பை அணிக்கு இருபத்தி ஏழு ஆண்டுகளா?…திருப்புமுனை தந்த தொடர்…

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய…

3 days ago

வாகை சூடப்போகிறதா?…வாங்கிக் கட்டப்போகுதா?வங்கதேசம்…ஆறாம் தேதி துவங்க உள்ளது அதிரடி…

இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…

3 days ago

பாஜக தமிழிசைக்கு சவால்…தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நடிகர்…

நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…

3 days ago

புரட்டாசி சனிக்கிழமை…பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…

தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…

3 days ago

இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…

தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…

3 days ago