அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகிய காரணம் குறித்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தற்போது வைரலாகி இருக்கிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு இந்த வருடம் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட இருந்தனர். ஆனால் பிரச்சாரத்தில் ஜோ பைடன் தொடர்ந்து தடுமாறி வந்தார்.
இதனால் அவர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என அவர் கட்சிக்குள்ளையே எதிர்ப்பு குரல் கிளம்பியதை அடுத்து இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக திங்கட்கிழமை அறிவித்திருந்தார். தன்னுடைய மீதம் இருக்கும் ஆட்சி காலத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தன்னுடைய முடிவு குறித்து முக்கிய காரணத்தை நாட்டு மக்களிடம் ஜோ பைடன் பேசி இருப்பது வைரலாகி இருக்கிறது.
அவர் பேசியதாவது, இளம் சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கொடுப்பதே தற்போது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதற்காகவே நான் இந்த முடிவை முதலில் எடுத்தேன். ஜனநாயகத்தை காப்பதற்காகவே நான் இந்த தேர்தலில் இருந்து விலகினேன். கமலா ஹாரிஷ் அனுபவம் மிக்கவர். திறமைசாலி.
துணை ஜனாதிபதியாக இருந்தபோதே அவருடைய செயல்பாடுகள் வரவேற்பை பெற்றது. தற்போது அவருக்கு நாட்டை வழிநடத்த ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். தன்னுடைய ஆதரவை கமலா ஹாரிஸிற்கு நேரிடையாக தெரிவித்து இருந்தாலும் ஜனநாயக கட்சி சார்பில் இருந்து அடுத்த மாதம் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…
கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…
பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…
இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…