Categories: latest newstamilnadu

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்…அதிகரிக்கும் பதட்டம்?…

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வைத்து கடந்த மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெருநகரின் முக்கிய இடத்தில் வைத்து தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியாக தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசின் மீது கடுமையான விமர்சனத்தை கிளப்பியது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அரசியல் கட்சிகள் தங்களது குற்றச்சாட்டினையும், விமர்சனங்களையும் முன் வைத்தனர். கொலை சம்பவத்தை தொடர்புடையதாக சிலர் சரணடைந்த நிலையில், விசாரணைக்கு செல்லும் வழியில் போலீஸாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடி திருவேங்கடத்தை காவல் துறையினர் என்கவுண்டர் செய்தனர், விசாரணை முடுக்கி விடப்பட்டு போலீஸாரின் வளையத்திற்குள் பலர் கொண்டு வரப்பட்டு அவர்களிடம் கொலை பின்னணி பற்றிய முழு விவரங்களை பெற தீவரமாக முயன்று வருகின்றனர் காவல் துறையினர்.

Armstrong Family and CM

வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்து வந்தார். அதோடு இந்த சம்வத்தின் மீது முறையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட அரசு உதவும் என உறுதியும் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் குடியிருந்து வரும் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் குண்டு வீசி கொலை செய்யப்படுவார்கள் என கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்படுள்ள செய்தி மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடக்கூடாது என காவல் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

சதீஷ் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தை கைப்பற்றியுள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

sankar sundar

Recent Posts

தலைமை பொறுப்புக்கு வர வாரிசாக இருக்க வேண்டும்…வானதி சீனிவாசன் விமர்சனம்…

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…

16 hours ago

அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…

16 hours ago

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த…

17 hours ago

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

1 day ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

1 day ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

1 day ago