திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு நாட்கள் விஐபி தரிசனத்தை ரத்து செய்வதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். பல்வேறு நாட்டில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வந்து செல்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கட்டுக்கடங்காத அளவிற்கு பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
கூட்டமாக இருந்தாலும், வெயில் மழை என எதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த மூன்று நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. வழக்கமான கூட்டத்தை விட அதிக அளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்திருக்கிறார்கள். அதிலும் இன்று சனிக்கிழமை என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கின்றது.
பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பதியில் இரண்டு நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருக்கின்றது. ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு வருகிற 9-ம் தேதி மற்றும் 16ஆம் தேதி களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகின்றது.
மேலும் ஆனி வாரம் ஆஸ்தானம் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஒன்பதாம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற இருப்பதால் 12 மணிக்கு பிறகு தான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 5 மணி நேரம் இடைவெளியில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.
தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…
தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…