திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் புவனேஸ்வரன் என்கிற இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸார் துப்புத் துலக்கியுள்ளனர்.
திருச்சி மணப்பாறையைச் சேர்ந்தவர் 26 வயதான புவனேஸ்வரன். திருப்பூர் ஏவிபி லே-அவுட் பகுதியில் தங்கியிருந்து வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் சமீபத்தில் நான்கு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்த திருப்பூர் போலீஸார், விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
சந்தேகத்தின்பேரில், புவனேஸ்வரனுடன் சமீபத்தில் சண்டையிட்ட ஒரு சிறுமியின் தந்தையைப் பிடித்து போலீஸ் விசாரித்தது. இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இன்ஸ்டாகிராம் மூலம் இளம் பெண்களுடன் பழகி, அவர்களுடன் வீடியோ காலில் பேசும் வழக்கம் கொண்ட புவனேஸ்வரன், அதை வீடியோவாகவும் போட்டோவாகவும் பதிவு செய்து வைத்துக் கொள்வாராம்.
பின்னர், அந்த போட்டோ, வீடியோவைக் காட்டி இளம்பெண்களிடம் பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகிய புவனேஸ்வரன், அந்த சிறுமியிடமும் வீடியோ காலில் பேசி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் புவனேஸ்வரனின் மிரட்டலை அடுத்து, அவருடன் பழகுவதை சிறுமி நிறுத்தியிருக்கிறார்.
மேலும், தமிழரசன் என்பவருடன் சிறுமி நெருங்கிப் பழகினாராம். இதைக் கண்டு ஆத்திரமடைந்த புவனேஸ்வரன், தமிழரசனை நேரில் சந்தித்து சிறுமியின் வீடியோ, போட்டோக்களைக் காட்டியிருக்கிறார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தமிழரசன், இதுகுறித்து சிறுமியின் தந்தையிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, புவனேஸ்வரனிடம் அந்த சிறுமியின் தந்தை சண்டை போட்டிருக்கிறார்.
இதையடுத்து, தமிழரசன் மூலம் கூலிப்படையை ஏவி புவனேஸ்வரனை கொலை செய்திருக்கிறார். இந்த விவகாரத்தில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள தமிழரசன் மற்றும் கூலிப்படையினரை போலீஸார் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறார்கள்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…