திருப்பூர் மாவட்டம் ஒட்டபாளையம் கிராமத்தில் இரவு நேரங்களில் கூரை மீது விழும் கற்களால் அப்பகுதி மக்கள் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிதான் ஒட்டபாளையம். இந்த கிராமத்தின் மதுரை வீரன் கோயில் அருகே உள்ள காலனியில் இரவு நேரங்களில் வீடுகளின் மீது கற்கள் திடீரென வந்து விழுவதாகச் சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
கடந்த 15 நாட்களாக இரவு 7 மணிக்குப் பிறகு இப்படி திடீரென வந்து விழும் கற்களால் பல வீடுகளின் ஓடுகளும் உடைந்து சேதமடைந்திருக்கின்றன. இதுகுறித்து போலீஸில் கிராம மக்கள் புகார் அளிக்கவே போலீஸாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதவிர ட்ரோன் கேமரா, உள்ளூர் இளைஞர்கள் கிரேன் மீது ஏறி நின்றும் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டும், கற்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால், கற்களை எறிவது மனிதர்கள்தானா… இல்லை குட்டிச்சாத்தானின் வேலையா என அப்பகுதி மக்கள் பீதியடைந்திருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் உள்ளிட்ட அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கிறார்கள் ஒட்டபாளையம் கிராம மக்கள்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…