Categories: indialatest news

இந்தப் பிறப்புதான் நல்ல ருசிச்சு சாப்பிட கிடைச்சது… இன்று உலக பிரியாணி தினம்… அதன் வரலாறு பாப்போமா…?

இன்று உலகம் முழுவதும் பிரியாணி தினம் கொண்டாடப்பட்ட வருகின்றது. இந்த பிரியாணி தினத்தை முன்னிட்டு அதன் வரலாற்றை நாம் தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகம் எங்கும் இருக்கும் மக்கள் பல்வேறு நாடுகளிலும், பிராந்தியங்களிலும் சிக்கன், மட்டன், மீன், காய்கறிகள், காளான் உள்ளிட பல்வேறு வகையான பிரியாணிகளை சமைத்து விரும்பி உணவாக சாப்பிடுவார்கள்.

இந்தியாவிலும் பிரியாணிக்கு என தனி மவுசு இருக்கின்றது. அரிசி மற்றும் இறைச்சி உணவான பிரியாணியின் பிறப்பிடம் ஈரான் தான். இங்கு தான் முதன்முதலில் பிரியாணி உருவானது. அதன் பிறகு அந்த உணவுப் பழக்கம் இந்தியா முழுவதும் பரவியது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பிரியாணியின் சுவையில் வித்தியாசமான அனுபவங்களை உணவு பிரியர்கள் பெறுகிறார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் அதன் கலாச்சாரம் மற்றும் மசாலா பொருட்கள் போன்றவற்றின் மூலமாக பிரியாணியின் சுவை சற்று வேறுபடுகின்றது. இருப்பினும் இது ஒரு ருசியான உணவு. உலகம் எங்கிலும் இந்த உணவை உணவு பிரியர்கள் ரசித்து ருசித்து சாப்பிட்டு வருகிறார்கள்.

இந்தியாவிற்கு பிரியாணி வந்த வரலாறு எப்படி தெரியுமா?

முகலாயர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்குள் பிரியாணி வந்ததாக கூறப்படுகின்றது. ஈரான் மற்றும் அதன் உட்பட்ட மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் இருந்து வணிகத்திற்காக இந்தியாவிற்கு வந்தவர்கள் பிரியாணி உணவை இங்கு அறிமுகம் செய்திருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. பிரியாணியில் பல வகை உள்ளது.

ஹைதராபாத் பிரியாணி , சிந்தி பிரியாணி, டெல்லி பிரியாணி, தலச்சேரி பிரியாணி, லக்னோவி பிரியாணி, கொல்கத்தா பிரியாணி என பல வகையான பிரியாணிகளை நாம் கூறிக் கொண்டே போகலாம். தமிழகத்திலேயே பிரியாணியை பல வகையாக பிரித்து மக்கள் விருப்பமுடன் உண்டு வருகிறார்கள். இந்தியாவில் பெரும்பாலும் ஹைதராபாத் பிரியாணி என அழைக்கப்படும் பாஸ்மதி அரிசி, இறைச்சி மற்றும் சிறப்பு மசாலா பொருட்களுடன் தயாரிக்கப்படும் பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்கள்.

Ramya Sri

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

2 hours ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

3 hours ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

3 hours ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

3 hours ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

4 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

4 hours ago