சுங்கச்சாவடிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அடிக்கடி சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. பொதுவாக இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண உயர்வை அமுல்படுத்துவது வழக்கம்.
ஆனால், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது சுங்கச்சவாடிகளுக்கு கட்டண உயர்வை அமுல்படுத்தும் வேலையில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த 2ம் தேதி இரவு முதல் கட்டண உயர்வு அமுலுக்கு வந்திருக்கிறது.
சென்னை அருகேயுள்ள அக்கரை – மாமல்லபுரம் இடையே உள்ள சுங்கச்சவாடியில் இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டண உயர்வு அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ம் தேதி வரை அமுலில் இருக்கும். அதன்பின் புதிய கட்டணம் அமுல்படுத்தப்படும்.
இதையடுத்து, கார் மற்றும் ஜீப் போன்ற வாகனங்களுக்கு ரூ.1 முதல் 68 வரையும், இலகு ரக வணிக வாகனங்களுக்கு 2 ரூபாய் முதல் 110 ரூபாய் வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னை – மாமல்லபுரம் இடையே போக்குவரத்து அதிகரித்திருப்பதால் 2018ம்ன் வருடமே அங்கு நான்கு வழிச்சாலை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…
தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…
வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…
நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…
இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…