சமீபகாலமாகவே இளைய சமுதாயத்தினர் பலரும் சமூக வலைத்தளங்களில் முழ்கி விடுகின்றனர். ரீல்ஸ், வீடியோ, விலாக் என வாழ்க்கையை மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். இது ஒரு டைம்பாஸ் தானே என நினைத்தால் அது உயிரை காவு வாங்கும் நிலைக்கே சென்றுள்ளது.
மும்பையை சேர்ந்த சிஏ படித்தவர் அன்வி காம்தர். இவருக்கு டிராவல் என்றால் ரொம்பவே பிடிக்குமாம். அடிக்கடி வெளியில் நண்பர்களுடன் ட்ரிப் அடிப்பதை வழக்கமாக வைத்து இருந்தார். இன்ஸ்டா வளர்ச்சிக்கு பின்னர் அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய கணக்கில் போட்டு வந்தார். டிராவல் டிப்ஸும் வழங்கினார்.
இதனால் அன்வி கிடுகிடுவென வளர்ந்து தற்போது இரண்டரை லட்சம் ஃபாலோயர்களை வைத்து இருக்கிறார். இதனால் இன்னும் அதிகமான பயணங்களை செய்தார் அன்வி. ஆடிட்டராக வேலை செய்யும் அன்வி தன்னுடைய ஆடிட்டர் நண்பர்களுடன் மழைக்கால பயணமாக மங்கான் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு வீடியோக்கள், போட்டோ எடுத்துவிட்டு அன்வி ரீல்ஸ் எடுத்துக்கொண்டு இருந்து இருக்கிறார்.
அப்போது தவறுதலாக 300 அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்து விடுகிறார். நண்பர்களும் பதறி அடித்து உள்ளூர் காவல்துறைக்கு அழைக்க அவர்கள் மீட்பு குழுவுடன் அங்கு வருகின்றனர். அவர்கள் உதவியுடன் 6 மணி நேரத்துக்கு பின்னர் அன்வி கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனை தூக்கி செல்லப்பட்டார்.
ஆனால் பரிதாபமாக அன்வி மருத்துவமனை சென்ற வழியிலேயே உயிரிழந்தார். ரீல்ஸால் அன்வி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களும் இன்ஸ்டாவே உயிரினை பறித்துவிட்டதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த…
இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…
ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…