Categories: latest newstamilnadu

மோடிக்கு கோவில்… பூஜை, புனஸ்காரங்களுடன் வழிபாடு செய்யும் விவசாயி… இதுல நேர்த்திக்கடன் வேற இருக்கா?…

திருச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி அதற்கு தினமும் பூஜை செய்து வருகின்றார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிராமத்தை சேர்ந்து விவசாயி சங்கர். துபாயில் வேலை பார்த்து வந்த இவர் சொந்த ஊர் திரும்பிய பிறகு விவசாயம் மீது இருந்த ஆர்வம் காரணமாக விவசாயம் செய்ய தொடங்கினார். மேலும் பிரதமர் மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் அந்த திட்டத்தால் பயணம் அடைந்திருக்கின்றார். இதனால் பிரதமர் மோடி மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டது.

அதன் காரணமாக கோவில் கட்டத்திட்டமிட்ட இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் மோடிக்கு சிலை அமைத்து கோவில் எழுப்பினர். 1.25 லட்சம் செலவு செய்து 6 மாதங்களாக இந்த கோயிலை கட்டி இருக்கின்றார். தான் கட்டி இருக்கும் கோயிலில் பிரதமர் மோடிக்கு மார்பளவு சிலை அமைத்திருக்கின்றார். மேலும் பிரதமர் மோடியின் சிலையுடன் சாமி படங்கள் மற்றும் காமராஜர் எம்ஜிஆர், ஜெயலலிதா, மோடி, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் புகைப்படங்களையும் இணைத்து வைத்திருக்கின்றார்.

விவசாயத்தில் விளைச்சல் அதிகரித்ததால் சிறப்பு வழிபாடு செய்து வருகிறார். மேலும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும் என்று வேண்டுதல் வைத்துள்ளாராம். அந்த வேண்டுதல் நிறைவேறியதால் மோடிக்காக கட்டிய கோயிலில் சிறப்பு பூஜையும் செய்து இருக்கின்றார். மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது “மோடி மீது இருந்த அன்பு காரணமாக கோவில் கட்டியுள்ளேன்.

தேங்காய், மாங்காய், மரவள்ளி போன்ற விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கின்றது. அதனால் மோடியை நினைத்து தினமும் பூஜை செய்து வருகின்றேன். மேலும் அவர் மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும் என்று பழனி முருகனிடம் வேண்டுதல் வைத்தேன். அது நிறைவேறியதால் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடனை செலுத்த உள்ளேன்.

இது தவிர என் வயலில் விளைந்த பத்து மூட்டை நெல் மற்றும் கிடாவெட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்ய இருக்கின்றேன். பிரதமர் மோடியின் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. எனக்கு பிறகும் இந்த கோவில் இருக்க நிலத்தில் ஒரு பகுதியை இந்த கோயிலுக்காக எழுதி பத்திரம் போட்டு வைத்திருக்கின்றேன்” என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

Ramya Sri

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

4 hours ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

4 hours ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

7 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

8 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

8 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

9 hours ago